முருங்கைக்காய் விலை இரு மடங்கு உயர்வு - பெண்கள் அதிர்ச்சி

முருங்கைக்காய் விலை இரு மடங்கு உயர்வு - பெண்கள் அதிர்ச்சி

திருப்புவனம் சந்தையில் முருங்கைக்காய் விலை இரு மடங்கு உயர்வு - பெண்கள் அதிர்ச்சி

திருப்புவனம் சந்தையில் முருங்கைக்காய் விலை இரு மடங்கு உயர்வு - பெண்கள் அதிர்ச்சி
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் தினசரி காய்கறி மார்க்கெட்டில் 30க்கும் மேற்பட்ட கடைகளில் காய்கறி விற்பனை செய்து வருகின்றனர். மதுரை மொத்த மார்க்கெட்டில் இருந்து காய்கறிகள் வாங்கி வந்து விற்பனை செய்கின்றனர். கத்தரிக்காய், வெண்டைக்காய், புடலங்காய் உள்ளிட்டவை அல்லிநகரம், சொக்கநாதிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து விவசாயிகளிடம் மொத்தமாக வாங்கி விற்பனை செய்கின்றனர். கார்த்திகை பிறந்த உடன் காய்கறிகள் விலை கணிசமாக உயரும். பெரும்பாலான காய்கறிகளின் விலை சற்று உயர்ந்துள்ள நிலையில் முருங்கைக்காய் விலை மட்டும் இருமடங்காக உயர்ந்துள்ளது. மதுரை மார்க்கெட்டிற்கு திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து முருங்கைக்காய் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. கடந்த மாதம் வரை ஒரு கிலோ (7 முதல் 10 காய்கள் வரை இருக்கும்) 35 ரூபாய் என விற்பனை செய்த நிலையில் தற்போது 90 ரூபாயாக உயர்ந்துள்ளது. ஒரு காய் 15 ரூபாய்க்கு விற்பனை செய்வதால் பெண்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Tags

Next Story