பஸ் நிறுத்தத்தில் குடிபோதை ஆசாமி நடுரோட்டில் உறங்கியதால் போக்குவரத்து பாதிப்பு !!

பஸ் நிறுத்தத்தில் குடிபோதை ஆசாமி நடுரோட்டில்  உறங்கியதால் போக்குவரத்து பாதிப்பு !!

குடிபோதை ஆசாமி 

ஜெயங்கொண்டம் தா பழூர் பஸ் நிறுத்தத்தில் குடிபோதையில் நடுரோட்டில் படுத்து எழுந்திருக்காத வாலிபரின் செயலால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் பரபரப்பு. ஏற்பட்டது.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே வடுகர்பாளையம் இருளர் காலனித்தெருவை சேர்ந்தவர் மணி (25) இவரது மனைவி சிந்துமதி இன்று காலை குண்டுமணி அரைத்து சாப்பிட்டு ஜெயங்கொண்டம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் மனைவியை பார்க்க நிறைந்த குடிபோதையில் சென்று மனைவியை பார்க்க அனுமதிக்குமாறு காவலாளிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார் அப்போது அங்கு காவல் பணியில் இருந்த காவலாளி காலையில் வந்து பார்க்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.இதனால் காவலாளிக்கும் மணிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும் மருத்துவரிடம் பேசிக் கொள்வதாக கூறி சென்ற அவர் ஜெயங்கொண்டம் தா.பழூர் சாலை பிள்ளையார் கோயில் பஸ் நிறுத்தத்தில் சாலை நடுவே படுத்துக்கொண்டு எழுந்திருக்காமல் குடிபோதையில் தன்னை மறந்து கிடந்துள்ளார். மேலும் அவருக்கு அருகாமையில் காலியான விஷப்பாட்டில் ஒன்றும் இருந்துள்ளது.

இதையடுத்து போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் மதிவாணன் விரைந்து சென்று அவரை அப்புறப்படுத்தி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்து போக்குவரத்து நெரிசலை சீர் செய்தார். குடிபோதையில் வாலிபரின் செயலால் ஜெயங்கொண்டம் தா.பழூர் சாலையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

விஷமருந்து சாப்பிட்டாரா? அல்லது குடி போதை தான் காரணமா? என்பது குறித்து ஜெயங்கொண்ட போலீசார் விசாரித்து வருகின்றனர்.மேலும் அரசு தலைமை மருத்துவமனையில் குடிபோது போதையில் ஆம்புலன்ஸ்கள் செல்லும்போது குறுக்கே படுத்துக்கொண்டு ஆம்புலன்ஸ்க்கு வழி விடாமல் தகராறு செய்ததாகவும் கூறப்படுகிறது அப்போது போலீசார் அவரை கண்டித்து அனுப்பி வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story