மதுபோதையில் வெடிகுண்டு மிரட்டல் - கூலித்தொழிலாளி கைது

மதுபோதையில் வெடிகுண்டு மிரட்டல் - கூலித்தொழிலாளி கைது

கணேஷன்

உதகை அருகே உள்ள தாம்பட்டி அண்ணா நகரை சேர்ந்தவர் கணேஷன்(48). கூலி தொழிலாளியான இவர் குடி போதையில் அடிக்கடி 108 சேவை மையத்திற்கு தொடர்பு கொண்டு தொந்தரவு செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு மது போதையில் இருந்த கணேஷன் 108 அவசர சேவை மையத்திற்கு 3 முறை அழைத்து முதல்வர் இல்லம் உட்ப்பட உதகை அருகே உள்ள தாம்பட்டி மற்றும் அண்ணா நகர் பகுதிகளில் 8 இடங்களில் வெடி குண்டு வைத்து உள்ளதாகவும் முடிந்தால் கண்டுபிடித்துகொள்ளுங்கள் என மிரட்டல் விடுத்துள்ளார். அதனால் அதிர்ச்சி அடைந்த காவல் துறையினர் அவர் பேசிய செல்போன் எண் மூலம் இடத்தை கண்டுபிடித்து அதிகாலையில் கணேஷனை கைது செய்து லவ்டேல் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story