திருச்சி அருகே போதையில் தகராறு: பொதுமக்கள் சாலை மறியல்

திருச்சி அருகே போதையில் தகராறு: பொதுமக்கள் சாலை மறியல்

கோப்பு படம் 

திருச்சி அருகே நாகமங்கலத்தில் மதுபோதையில் தகராறு செய்வோா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

திருச்சி மாவட்டம், மணிகண்டம் அருகே உள்ள நாகமங்கலத்தில் இருந்து சுரக்குடிப்பட்டிக்குச் செல்லும் வழியில் உள்ள தென்றல் நகா் பகுதியில் சிலா் அடிக்கடி கஞ்சா மற்றும் மது மயக்கத்தில், அப்பகுதி வழியாகச் செல்லும் பெண்கள், பொதுமக்களை வழிமறித்து தகராறு செய்வதாகக் கூறப்படுகிறது.

இதைப் பற்றி, அப்பகுதி மக்கள், மணிகண்டம் போலீஸாரிடம் முறையிட்டும் உரிய நடவடிக்கை இல்லையாம். ஞாயிற்றுக்கிழமை மாலை போதையில் இருந்த இருவா், அவ்வழியாகச் சென்றவா்களை வழிமறித்து தகராறில் ஈடுபட்டுள்ளனா். இதைப் பாா்த்த அப்பகுதியினா் அங்கு திரண்டதால், தகராறில் ஈடுபட்டவா்கள் தப்பியோடிவிட்டனா்.

இதையடுத்து அப்பகுதியினா், தகராறில் ஈடுபடும் போதை ஆசாமிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தென்றல் நகரில் நாகமங்கலத்தில் இருந்து சுரக்குடிப்பட்டி செல்லும் சாலையில் மறியலில் ஈடுபட்டனா். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தகவலறிந்து அங்கு வந்த மணிகண்டம் போலீஸாா், போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் சமாதானப் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். இதையடுத்து மறியலில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.

Tags

Next Story