குடிபோதையில் மனைவியை கொலை:கணவனும் தற்கொலை

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கோளித்தொரை கிராமத்தை சார்ந்த பழங்குடியினத்தை சார்ந்தவர் ரகுநாதன்(40). கூலி தொழிலாளியான இவருக்கும் மனைவி ராணி(35) இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். நேற்று இரவு ரகுநாதனுக்கும் ராணிக்கும் குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது மது போதையில் இருந்த கணவன் ரகுநாதன் கட்டையால் மனைவி ராணியின் தலையில் தாக்கி உள்ளார். அதில் ராணி சம்பவ இடத்திலேயே ராணி உயிரிழந்துள்ளார்.

பின்னர் இச்சம்பவத்தால் அச்சமடைந்த கணவன் ரகுநாதன் தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். பின்பு இது குறித்து ரகுநாதனின் குழந்தைகள் கிராம மக்களிடம் தகவல் தெரிவித்தனர். அதனையடுத்து கிராம மக்கள் கோத்தகிரி காவல் துறையினருக்கு தகவல் அளிக்கபட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் இருவரின் உடல்களை கைப்பற்றி உதகை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர்.

கணவன் மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் மனைவியை கட்டையால் அடித்து கொன்று கணவனும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து கோத்தகிரி போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறனர் . தலைக்கேறிய போதையில் ஏற்பட்ட குடும்ப சண்டையில் மனைவியை கட்டையால் அடித்துக் கொன்ற கணவனும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கோத்தகிரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story