புறக்காவல் நிலையத்தில் ஒய்யார தூக்கம் - போதை ஆசாமி அழிச்சாட்டியம்

புறக்காவல் நிலையத்தில் ஒய்யார தூக்கம் - போதை ஆசாமி அழிச்சாட்டியம்

காவல் நிலைய வாசலில் போதை ஆசாமி தூக்கம் 

திருப்பூர் மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள புறக்காவல் நிலைய வாசலிலேயே போதை ஆசாமி ஒய்யாரமாக படுத்து உறங்கியதை பயணிகள் பலரும் கண்டு முகசுளிப்புடன் கடந்து சென்றனர்.

திருப்பூர் காமராஜ் சாலையில் கலைஞர் கருணாநிதி மத்திய பேருந்து நிலையம் உள்ளது. இந்த பேருந்து நிலையத்திலிருந்து ஈரோடு , கோவை, சேலம் திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கான பேருந்துகள் இயக்கப்படுகின்றன. நகரப் பேருந்துகளும் பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படுவதால் தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர்.

பேருந்து நிலைய வளாகத்திலேயே பாதுகாப்பு பணிக்காக புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. சுழற்சி அடிப்படையில் காவலர்கள் இங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்றைய தினம் அதிமுக ஆர்ப்பாட்டம் இருந்த காரணத்தாலும் ரோந்து பணியாலும் காவலர்கள் பணி நிமித்தமாக வெளியே சென்று இருந்தனர். பேருந்து நிலையத்திற்கு வந்த மது போதை ஆசாமி ஒருவர் காவல் நிலையம் என்பதையும் அறியாமல் பூட்டப்பட்ட காவல் நிலைய படியிலேயே ஒய்யாரமாக படுத்து உறங்கினார். காவல் நிலையத்திற்கு வந்த காவலர்கள் மது போதை ஆசாமியை எழுப்பி அவரை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

Tags

Next Story