மதுபோதையில் தாய் மகனுக்கு கொலை மிரட்டல்

மதுபோதையில் தாய் மகனுக்கு கொலை மிரட்டல்
கொலை மிரட்டல்
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் மதுபோதையில் தாய் மகனுக்கு கொலை மிரட்டல் வித்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியைச் சார்ந்தவர் ஐயப்பன் இவர் ரைட்டான் பட்டியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்ற பொழுது அங்கு காளிமுத்து கொத்தனார் மற்றும் அங்கு சிலர் மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது.

அவர்கள் ஐயப்பனை பார்த்து தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாகவும் அதை தடுக்க சென்ற ஐயப்பனின் தாயார் மாரியம்மாள் மீதும் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இது குறித்து மாரியம்மாளின் தாய் அளித்த புகாரின் அடிப்படையில் ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story