திண்டுக்கல்லில் வந்து இறங்கிய துபாய் சிட்டி பொருட்காட்சி

திண்டுக்கல்லில் வந்து இறங்கிய துபாய் சிட்டி பொருட்காட்சி

துபாய் சிட்டி பொருட்காட்சி 

திண்டுக்கல் மக்கள் குதூகலிக்க துபாய் சிட்டி பொருட்காட்சி துவக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் சீலப்பாடி அருகே ரயில்வே மேம்பாலம் அருகில் உள்ள கேஆர்எஸ் மைதானத்தில் ஹர்ஷா எண்டர்பிரைசஸ் நடத்தும் லயன் டாக்டர் கே. ரெத்தினம் வழங்கும் துபாய் சிட்டி பொருட்காட்சி துவக்கப்பட்டுள்ளது. இதை தரணி குழுமங்களின் தலைவர் டாக்டர் கே.ரெத்தினம் துவக்கி வைத்தார். ஜி.டி.என்.கல்லூரி இயக்குனர் துரை ரத்தினம், ஹர்ஷா என்டர்பிரைசஸ் நிர்வாக இயக்குனர் சியாம் ஹரிஷ் உட்பட பலர் பங்கேற்றனர். இந்த பொருட்காட்சி நேற்று துவங்கியது. வரும் ஜூன் 3ஆம் தேதி வரை நடக்கிறது. இந்த துபாய் சிட்டி பொருட்காட்சியில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குதூகலிக்கும் வண்ணம் அனைத்து விதமான பொழுதுபோக்கு அம்சங்களும் இடம்பெற்றுள்ளன. லண்டன் பிரிட்ஜ், மலேசியா டியூன் டவர், துபாய் நிலா பிறை, சிறுவர்கள் மற்றும் பெரியவர்கள் மகிழ்ந்து விளையாட ராட்டினங்கள் ,ரயில்கள், ஜம்பிங் பலூன்கள் உட்பட பல விதமான பொழுதுபோக்கு அம்சங்களும் இடம் பெற்றுள்ளன.

Tags

Next Story