கனமழையால் குற்றாலத்தில் ஆா்ப்பரித்து கொட்டிய தண்ணீா்

கனமழையால் குற்றாலத்தில்  ஆா்ப்பரித்து கொட்டிய தண்ணீா்

குற்றால அருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர் 

தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் புதன்கிழமை காலை முதல் வியாழக்கிழமை அதிகாலை வரை தொடா்ந்து பெய்த கனமழையின் காரணமாக அனைத்து அருவிகளிலும் தண்ணீா் ஆா்ப்பரித்துக் கொட்டியது. குற்றாலம் பேரருவியில் புதன்கிழமை இரவு அதிகளவில் தண்ணீா்விழுந்ததால் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது. வியாழக்கிழமை பிற்பகலில் தண்ணீா்வரத்து சற்று குறைந்ததையடுத்து பேரருவியில் ஆண்கள் குளிக்கும் பகுதியில் ஓரமாக நின்று குளிக்க அனுமதிக்கப்பட்டனா். தொடா் மழையின் காரணமாக குற்றாலம் ஐந்தருவி, பழையகுற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீா் ஆா்ப்பரித்து கொட்டுகிறது.

Tags

Next Story