வெயிலின் தாக்கம் அதிகரிப்பால் - மக்கள் அவதி!

வெயிலின் தாக்கம் அதிகரிப்பால்  - மக்கள் அவதி!

வெயிலின் தாக்கம் அதிகம்

திருவண்ணாமலையில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
திருவண்ணாமலையில் கடந்த சில தினங்களாக வெயில் கொளுத்தி வருகிறது. வெயிலின் தாக்கம் வழக்கத்தை விட கடுமையாக காணப்பட்டது. இதனால் சாலையில் அனல் காற்று வீசியது. பகல் நேரத்தில் சாலையில் இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள் மற்றும் நடந்து சென்றவர்கள் மிகவும் அவதி அடைந்தனர். குளிர்பான கடைகள் மற்றும் ஐஸ்க்ரீம் கடைகளில் மக்கள் குவிந்தனர் .திருவண்ணாமலையில் இந்த ஆண்டில் முதல்முறையாக 100 டிகிரி வெயில் அளவு பதிவாகி உள்ளது.கோடை மழை எப்போது வரும் என்ற ஏக்கத்தில் பொதுமக்கள் காத்திருக்கின்றனர்.

Tags

Next Story