சிவகாசி அருகே குடியிருப்பு பகுதியில் மின் இணைப்பு இல்லாததால் குடிநீர் விநியோகம் பாதிப்பு...

சிவகாசி அருகே குடியிருப்பு பகுதியில் மின் இணைப்பு இல்லாததால் குடிநீர் விநியோகம் பாதிப்பு...

குடிநீர் விநியோகம் பாதிப்பு.

சிவகாசி அருகே மின் இணைப்பு வழங்காதால் 300 குடியிருப்பு வீடுகளுக்கு குடிநீர் விநியோகம் பாதிப்பு அடைந்ததுள்ளது.

சிவகாசி அருகே மின் இணைப்பு வழங்காதால் 300 குடியிருப்பு வீடுகளுக்கு குடிநீர் விநியோகம் பாதிப்பு. விருதுநகர் மாவட்டம், சிவகாசி ஊராட்சி ஒன்றியம் வேண்டுராயபுரம் கிராமத்தில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்பு வீடுகள் உள்ளன.

இந்த வீடுகளுக்கு அந்த பகுதியில் உள்ள போர்வெல் மூலம் குடிநீர் விநியோகம் வழங்கப்பட்டு வருகின்றன இந்த நிலையில் சுமார் 300 குடியிருப்பு வீடுகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யும் வகையில் வேண்டுராயபுரம் கிராமத்தில் தனியார் கிரானைட் அருகில் சிவகாசி ஊராட்சி ஒன்றிய பொது நிதியிலிருந்து ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் ஆழ்துளை கிணறுடன் மின் மோட்டார் பம்பு அமைக்கும் பணிகள் கடந்த சில வாரங்களாக நடைபெற்று வந்தன.

இந்த பணிகள் முடிந்து சுமார் 20 நாட்களுக்கு மேலாகியும் இந்த ஆழ்துளை கிணற்றில் இருந்து பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படாத நிலையே உள்ளது.விரைவில் அந்த பகுதியில் மின் இணைப்பு கொடுக்க மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கும் என அந்த பகுதி கிராம மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Tags

Next Story