குடிநீர் வினியோகம் பாதிப்பை சீரமைக்க கோரிக்கை !

குடிநீர் வினியோகம் பாதிப்பை சீரமைக்க கோரிக்கை !

குடிநீர் குழாயில் உடைப்பு

விராலிமலையில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகி வருவதால் உடைப்பை சரி செய்ய குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விராலிமலையில் காவேரி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் திருச்சி மாவட்டம் முத்தரசநல்லூர் மற்றும் ஜீயாபுரம் பகுதிகளில் காவேரி ஆற்றில் நீர் ஊற்று நிலையம் அமைக்கப்பட்ட ராட்ச மின் மோட்டார்கள் மூலம் குடிநீர் உறிஞ்சப்பட்டு குழாய்கள் மூலம் புதுகை, ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. இனாம்குளத்தூர், விராலிமலை, மலைக்குடிபட்டி, இலுப்பூர், அன்னவாசல் வழியாக புதுக்கோட்டை நகரத்துக்கு குடிநீர் கொண்டு செல்லப்படும் குழாய்களில் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறி வீணாகி வருகிறது. இந்நிலையில் விராலிமலையில் இருந்து இனாம் குளத்தூர் செல்லும் சாலையில் விரியம் போர்குளம் ஜல்லிக்கட்டு திடல் எதிரே காவேரி கூட்டு குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக குடிநீர் வெளியேறி வருகிறது. இந்த தண்ணீர் சாலையோரம் வயல்களில் குளம் போல் தேங்கி நிற்கிறது இதுபோல் மே பூதக்குடி பிரிவு சாலை அருகே காவேரி குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகி வெளியேறி வருகிறது. இதனால் குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது உடைப்பை சரி செய்ய குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story