சௌந்தரராஜா பெருமாள் கோவிலில் பக்தர்களின் துலாபாரம் !

தாடிக்கொம்பு சௌந்தரராஜா பெருமாள் கோவிலில் பக்தர்கள் தங்களின் வசதிக்கேற்ப துலாபாரம் நேர்த்திகடன் செலுத்தலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திண்டுக்கல் அருகே தாடிக்கொம்பு அமைந்துள்ளது சௌந்தரராஜா பெருமாள் திருக்கோயில். இக்கோயில் மிகவும் புகழ்பெற்ற கோயிலாகும். திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு அடுத்தபடியாக மிக உயரமான 12 அடி துலாபாரம் சிறப்பாக அமைந்துள்ளது இங்குதான் என்று கூறப்படுகிறது. பக்தர்கள் தாங்கள் தங்களுடைய நேர்த்திக்கடனை செலுத்துவதற்காக எடைக்கு எடை கற்கண்டு, வெள்ளம், வாழைப்பழம், திராட்சைப்பழம், பேரீச்சைப்பழம், உள்ளிட்ட அனைத்து பழ வகைகள், ஏலக்காய், பச்சரிசி, சில்லரை, நாணயங்கள் நவதானியங்கள் ஆகியவற்றை பெருமாளுக்கு பக்தர்கள் துலாபாரம் மூலம் வழங்கலாம் கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story