வெடி விபத்தில் காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய துரைவைகோ

வெடி விபத்தில் காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய துரைவைகோ
சிவகாசியில் பட்டாசு ஆலை வெடி விபத்தில் காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய துரைவைகோ....
சிவகாசியில் பட்டாசு ஆலை வெடி விபத்தில் காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய துரைவைகோ.

சிவகாசி அருகே பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு துரைவைகோ நேரில் ஆறுதல... விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள செங்கமலப்பட்டி பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்த தொழிலாளர்களின் வீடுகளுக்கு நேரில் சென்ற மதிமுக முதன்மைச் செயலாளர் துரைவைகோ,

அவர்களது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.சிவகாசி அருகே செங்கமலப்பட்டி சுதர்சன் பட்டாசு ஆலையில் கடந்த 9ம் தேதி நடந்த பயங்கர வெடி விபத்தில் 6 பெண்கள் உட்பட 10 பேர் உயிரிழந்தனர். மேலும் 14 பேர் காயம் அடைந்தனர். இந்நிலையில் மதிமுக முதன்மைச் செயலாளர் துரைவைகோ,மத்திய சேனை,மேல சின்னையாபுரம்,

வி.சொக்கலிங்கபுரம்,சிவகாசி சிலோன் காலனி,நேருஜி நகர், இந்திரா நகர்,பாறைப்பட்டி, அய்யம்பட்டி பகுதியில் உள்ள பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்த தொழிலாளர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று, அவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.அதன்பின் சிவகாசி அரசு மருத்துவமனைகள் சிகிச்சை பெற்று வரும் காயமடைந்த தொழிலாளர்களை சந்தித்து ஆறுதல் கூறி நலம் விசாரித்தார்.

இந்நிகழ்வின் போது மதிமுக சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ரகுராம், முன்னாள் எம்.பி.சிப்பிபாறை ரவிசந்திரன். மற்றும் நகர,ஒன்றிய கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story