கட்டிட பணியின் போது 12 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்து வாலிபர் படுகாயம்

கட்டிட பணியின் போது 12 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்து வாலிபர் படுகாயம்

தீவிர சிகிச்சை

சேலம் நரசோதிப்பட்டியை சேர்ந்தவர் ஸ்ரீநாத் (வயது 27). இவர் வீராணம் அருகே புதிதாக கட்டப்பட்டு வரும் வீடு ஒன்றில் கட்டிட பணியில் ஈடுபட்டார். அப்போது அவர் 12 அடி உயரத்தில் இருந்து கீழே தவறி விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த ஸ்ரீநாத்தை அக்கம் பக்கத்தினர் மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்து அம்மாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story