கோவில் குளங்களில் 35 ஆண்டுகளுக்குப் பிறகு தூர் வாரும் பணி

திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோவில் தீர்த்தக்குளம் மற்றும் பாபநாச குளம் ஆகிய இரண்டு குளங்களில், 35 ஆண்டுகளுக்கு பிறகு தூர்வாருதல் பணி மேற்கொள்ளப்பட்டது.

அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோயில் சாமி தீர்த்தகுளத்திற்கு அருகில் உள்ள தீர்த்தக்குளம் மற்றும் பாபநாச குளம் ஆகிய இரண்டு குளங்களை சுமார் 35 ஆண்டுகளுக்கு பிறகு தூர்வாருதல் நிகழ்வு நடைபெற்றது.

மேலும் மலைக் கோயிலில் வரும் பக்தர்கள் எரிந்த பிளாஸ்டிக் பாலித்தின் கவர்களை அகற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது அதில் தமிழக அனைத்து சிவனடியார் கூட்டமைப்பு, ஈரோடு திருத்தொண்டிசுவரர் உழவாரப்பணி குழு திருச்செங்கோடு உமையொருபாகன் சிவத்தொண்டர்கள் நம்ம திருச்செங்கோடு அறக்கட்டளை இணைந்து சுமார் 250 க்கும் மேற்பட்ட சிவனடியார்கள் கலந்து கொண்டு மிகச் சிறப்பான முறையில் சகதிகள் நிறைந்த பாபநாச குளம் முழுமையாக தூர்வாரி மீண்டும் குளத்தில் குறைந்த அளவு தண்ணீர் விட்டு மீன்கள் விடப்பட்டது

Tags

Next Story