திரெளபதி அம்மன் கோவிலில் வசந்த விழாவை முன்னிட்டு துரியோதனன் படுகளம்

திரெளபதி அம்மன் கோவிலில்  வசந்த விழாவை முன்னிட்டு துரியோதனன் படுகளம்

துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி 

செய்யூர் அடுத்த அமைந்தங்கரனை கிராமத்தில் உள்ள திரெளபதி அம்மன் கோவிலில் வசந்த விழாவை முன்னிட்டு துரியோதனன் படுகளம் நடைபெற்றது.

செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் அடுத்த அமைந்தங்கரனை கிராமத்தில் திரௌபதி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம் இந்த நிலையில் இந்தாண்டு திரௌபதி வசந்த விழாவையொட்டி துரியோதனன் படுகளம் நடந்தது. கடந்த மாதம் கொடியேற்றத்துடன் இவ்விழா தொடங்கப்பட்டு மகாபாரத சொற்பொழிவு,

வில்வளைப்பு, சுபத்திரை திருமணம், திரௌபதி துகில், அர்ஜுனன் தபசு, கிருஷ்ணன் தூது, கர்ணன் மோட்சம் உள்ளிட்டவைகள் நடந்தது. அதனைத் தொடர்ந்து திரௌபதி அம்மனின் வசந்த திருவிழாவான துரியோதனன் படுகளம் நடந்தது.

இந்த நிகழ்வில் கோவில் அருகே களிமண்ணால் 25 அடி துரியோதனன் சிலை செய்து வைக்கப்பட்ட இடத்தில் பீமன் மற்றும் துரியோதனன் வேடமிட்ட கூத்தாடிகள் மகாபாரத்தில் போரிடும் போர்க்களக் காட்சி போல் தத்துரூபமாக நடித்து காண்பித்தனர். இந்த நிகழ்ச்சியில் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags

Next Story