மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்

மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்

மின் வாரியம் 

சேலம் அன்னதானப்பட்டியில் மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம் நாளை நடக்க உள்ளதாக மின்வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேலம் அன்னதானப்பட்டியில் உள்ள மேற்கு கோட்ட அலுவலகத்தில் நாளை (புதன்கிழமை) காலை 11 மணிக்கு மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடக்கிறது. மேற்பார்வை பொறியாளர் தண்டபாணி தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் சேலம் மேற்கு கோட்டத்திற்குட்பட்ட மின் நுகர்வோர்கள் கலந்து கொண்டு குறைகளை தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம். இந்த தகவலை சேலம் மேற்கு கோட்ட மின்சார வாரிய செயற்பொறியாளர் ராஜவேலு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்து உள்ளார்.

Tags

Next Story