பூம்புகார் தொகுதியில் மின்னணு வாக்குப்பதிவு செயல் விளக்கம்

பூம்புகார் தொகுதியில் மின்னணு வாக்குப்பதிவு செயல் விளக்கம்

செயல் விளக்கம் 

செம்பனார்கோயில் பகுதியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்களிக்க செயல்விளக்க பிரசார வாகனம் ஏற்படுத்தப்பட்டது.

மயிலாடுதுறை மாவட்டத்திற்கு உட்பட்ட பூம்புகார், சீர்காழி, மயிலாடுதுறை ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் எப்படி வாக்களிப்பது என பொதுமக்களுக்கு செயல்விளக்கம் அளித்து விழிப்புணர்வு ஏற்படுத்த மாவட்ட கலெக்டர் மகாபாரதி உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகார் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட செம்பனார்கோயில் அருகே மேமாத்தூர், அன்னவாசல், கடலி, இளையாளூர், அரங்கங்குடி,வடகரை உள்ளிட்ட பகுதிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் எப்படி வாக்களிப்பது என பொதுமக்களுக்கு செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.

இதனை முன்னிட்டு மேற்கண்ட பகுதிகளில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் விழிப்புணர்வு வாகனம் நிறுத்தப்பட்டு, அதில் உள்ள ஒலி ஒளி திரையுடன், மாதிரி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் உதவியுடன் எப்படி வாக்குப்பதிவு செய்வது என்று விளக்கம் அளிக்கப்பட்டது. இதனைக் கேட்டு தெரிந்து கொண்ட பொதுமக்களின் சந்தேகங்களுக்கும் பதில் அளிக்கப்பட்டது.

மேலும் தாசில்தார் சரவணன், தேர்தல் துணை தாசில்தார் பாபு ஆகியோர் பொதுமக்களிடையே வாக்கு அளிப்பதன் அவசியம் மற்றும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்குப்பதிவு செய்வது குறித்து உரிய செயல்விளக்கம் அளித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Tags

Next Story