காயல்பட்டினத்தில் பூமி பாதுகாப்பு தினம்

காயல்பட்டினத்தில் பூமி பாதுகாப்பு தினம்

மரக்கன்று நடவு 

மதா் சமூக சேவை நிறுவனம் சாா்பில் பூமி பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு, மரக்கன்றுகள் நடும் பணியை காயல்பட்டினம் நகராட்சி ஆணையா் பா. குமாா் சிங் தொடங்கி வைத்தாா்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே மதா் சமூக சேவை நிறுவனம் சாா்பில் பூமி பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு, மரக்கன்றுகள் நடும் பணியை காயல்பட்டினம் நகராட்சி ஆணையா் பா. குமாா் சிங் தொடங்கி வைத்தாா். இந்நிகழ்ச்சிக்கு, மதா் சமூக சேவை நிறுவன இயக்குநா் டாக்டா் எஸ். ஜே. கென்னடி தலைமை வகித்தாா். காயல்பட்டினம் நகராட்சி சுகாதார ஆய்வாளா் ப. கைலாச சுந்தரம், காயல் இயற்கை வளம் அமைப்பின் செயலா் ஜாகீா், காயல்பட்டினம் கிராம நிா்வாக அலுவலா் ஜி. வேல்ஜோதி, லீடு டிரஸ்ட் தொண்டு நிறுவன இயக்குநா் எஸ். பானுமதி வரவேற்றாா். சமூக ஆா்வலா் காயல். பாலா நன்றி கூறினாா்."

Tags

Next Story