பொங்கலுக்கு மும்முரமாக தயாராகி வரும் மண் பானைகள்

பொங்கலுக்கு மும்முரமாக தயாராகி வரும் மண் பானைகள்

மண் பானைகள் 

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் 300க்கும் மேற்பட்ட மண்பாண்ட தொழிலாளர்கள் வருடம் தோறும் சீசனுக்கு தகுந்தாற்போல் மண்பாண்ட பொருட்களை தயார் செய்து விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில் வரும் தை மாதம் கொண்டாடப்பட உள்ள பொங்கல் பண்டிகைக்காக மானாமரையில் கடந்து சில வாரங்களுக்கு முன்னதாகவே பொங்கல் பானை தயாரிக்கும் பணியில் மண்பாண்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது தயாரிக்கப்பட்டு வரும் பொங்கல் பானைகள் மிகவும் தரமானதாகவும், கலை நாயத்தோடும் இருப்பதோடு அனைத்து பகுதிகளில் இருந்தும் ஏராளமான வியாபாரிகள் கடந்த மாதமே ஆர்டர் கொடுத்துள்ளதாகவும் பானையின் விலை ரூபாய் 30 லிருந்து 120 வரை விற்பனை செய்யப்படுவதாகவும் மண்பாண்ட தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story