வெளியூர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட மண்பானைகள்

வெளியூர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட மண்பானைகள்

மண்பானைகள் 

மானாமதுரையிலிருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட மண்பானைகள்.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் 300க்கும் மேற்பட்ட மண்பாண்ட தொழிலாளர்கள் வருடம் தோறும் சீசனுக்கு தகுந்தாற்போல் மண்பாண்ட பொருட்களை தயார் செய்து தமிழகம் மட்டுமல்லாது பல்வேறு இடங்களுக்கு அனுப்பி வருகின்றனர். வருகிற ஜன.15ம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளதை முன்னிட்டு மண் பானைகளில் பொங்கல் வைப்பதற்காக மானாமதுரையில் கடந்த சில மாதங்களாக பானைகள் தயாரிக்கும் பணி நடைபெற்று வந்தது. பொங்கல் பண்டிகை நெருங்கி வருவதை தொடர்ந்து தயாரான பொங்கல் பானைகளை வெளியூர்களுக்கு வாகனங்களில் அனுப்பி வைக்கும் பணிகளில் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Tags

Next Story