ஈஸ்டர் : பூண்டி மாதா பேராலயத்தில் சிறப்பு பிரார்தனை

ஈஸ்டர் : பூண்டி மாதா பேராலயத்தில் சிறப்பு  பிரார்தனை

பூண்டி மாதா பேராலயம் 

தஞ்சை அருகே பூண்டி மாதா பேராலயத்தில் நடந்த ஈஸ்டர் சிறப்பு பிரார்தனையில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு பிரார்தனை செய்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் அருகே 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த பூண்டி மாதா பேராலயத்தில் ஈஸ்டர் பண்டிகையினையொட்டி சிறப்பு பிரார்தனை நடைபெற்றது. இயேசுகிறிஸ்து உயிர்தெழுந்த வகையில் பாஸ்கா ஒளி ஏற்றப்பட்டது. கலையரங்க வளாகத்தில் மைய பகுதியில் ஏற்றப்பட்ட ஒளி விளக்கு அரங்கத்தில் மேடைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநில மக்கள் கலந்து கொண்டு கையில் மெழுகுவர்த்தியை ஏந்தி பிரார்த்தனை செய்தனர். அதனை தொடர்ந்து பங்கு சாமியார்கள் சாம்சன், ரூபன் அந்தோணி ராஜ், ஆல்பர்ட் சேவியர், ஆகியோர் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

Tags

Next Story