பிப்.13 ல் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

பிப்.13 ல் மின் நுகர்வோர்  குறைதீர் கூட்டம்


செயற்பொறியாளர் அலுவலகம்


பெரம்பலூர் மின்கோட்டத்திற்கு உட்பட்ட மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் பிப்ரவரி 13ஆம் தேதி மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெற உள்ளதாக மின்வாரிய செயற்பொறியாளர் தகவல் தெரிவித்தார்.
பெரம்பலூர் மின்கோட்டத்திற்கு உட்பட்ட மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மின்வாரிய கோட்ட, மின் செயற்பொறியாளர் அலுவலகத்தில் பிப்ரவரி - 13ம் தேதி காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது . இந்த கூட்டத்தில் பெரம்பலூர் கோட்டத்திற்கு உட்பட்ட மின் நுகர்வோர்கள் கலந்துகொண்டு தங்களுடைய கோரிக்கைகள் , குறைகளை நேரில் முறையிட்டு பயன்பெறலாம் என பெரம்பலூர் மின்கோட்ட செயற்பொறியாளர், அசோக் குமார் பிப்ரவரி 9ஆம் தேதி விடுத்துள்ள செய்திகுறிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story