குட்காவில் கொள்ளையடித்தவர் தான் எடப்பாடி பழனிச்சாமி :ஜக்கம்மா சொல்றா

குட்காவில் கொள்ளையடித்தவர் தான் எடப்பாடி பழனிச்சாமி :ஜக்கம்மா சொல்றா

வாக்கு சேகரித்த கோடாங்கி

எடப்பாடி சட்டமன்ற தொகுதி தாவாந்தெரு பகுதியில் திமுகவுக்காக ஜக்கம்மா குறி சொன்ன குடுகுடுப்பை கோடாங்கி வாக்கு சேகரித்தார்.

2024 நாடாளுமன்ற தேர்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் போட்டி போட்டுக் கொண்டு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். அதனைத் தொடர்ந்து சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்கு நகரத்திற்கு உட்பட்ட தாவாந்தெரு பகுதியில் சேலம் நாடாளுமன்ற திமுக வேட்பாளர் டி எம் செல்வகணபதி ஆதரித்து ஜக்கம்மா குறி சொல்லும் கோடாங்கி குடுகுடுப்பை அடித்தவாறு அதிமுகவுக்கு போடும் ஓட்டு, பிஜேபிக்கு போடும் ஓட்டாகும்,

நாட்டை பாதுகாக்க நினைப்பது முதலமைச்சர் மு க ஸ்டாலின் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாட்டை அழிக்க நினைப்பது எடப்பாடி பழனிச்சாமி பிரதமர் மோடி ஜிஎஸ்டி வரி கொண்டு வந்ததற்கு ஆதரவாக செயல்பட்டது எடப்பாடி பழனிச்சாமி என குடுகுடுப்பை அடித்தவாறு ஜக்கம்மா வாக்கு கூறி திமுகவுக்கு ஆதரவாக வினோத் வினோத வாக்கு சேகரிப்பு ஈடுபட்டனர்.

அப்போது எடப்பாடி நகர மன்ற தலைவர் டி எஸ் எம் பாஷா, நகரக் கழக துணைச் செயலாளர் வடிவேலு ஐந்தாவது வார்டு உறுப்பினர் செல்வகுமார் மற்றும் திமுக உறுப்பினர்கள் பலர் உடன் இருந்தனர்.

Tags

Next Story