சாமித்தோப்பில் எடப்பாடி பழனிச்சாமி தரிசனம்

சாமித்தோப்பில் எடப்பாடி பழனிச்சாமி தரிசனம்
சாமிதோப்பில் தரிசனம் செய்த முன்னாள் முதல்வர்
முன்னாள் முதலவர் எடப்பாடி பழனிசாமி சாமித்தோப்பு அய்யா வைகுண்டர் தலைமைப்பதியில் நடைபெறும் தைத்திருவிழா நிகழ்ச்சியில் பங்கேற்று பாரம்பரிய முறைப்படி மேல்சட்டையின்றி தலைப்பாகை அணிந்து சுவாமி தரிசனம் செய்தார்.
தமிழக முன்னாள் முதல்அமைச்சரும், அதிமுக பொதுசெயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி நேற்று மதியம் திருவனந்தபுரம் வழியாக கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வந்தார். அவருக்கு அதிமுக குமரி மாவட்ட செயலாளர் தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ. தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அவர் குமரியில் பிரசித்தி பெற்ற சாமித்தோப்பு அய்யா வைகுண்டர் தலைமைப்பதியில் நடைபெறும் தைத்திருவிழா நிகழ்ச்சியில் பங்கேற்று பாரம்பரிய முறைப்படி மேல்சட்டை இன்றி தலைப்பாகை அணிந்து சுவாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோயில் நிர்வாகிகளிடம் அய்யா வைகுண்டரின் சிறப்புக்களை கேட்டு அறிந்தார். பின்னர் அங்கு பக்தர்களுக்கு அன்னதானத்தை தொடங்கி வைத்தார். அதைதொடர்ந்து நாகர்கோவிலில் அதிமுக நிர்வாகிகளை சந்தித்து பேசினார்.

Tags

Next Story