வாணியம்பாடியில் எடப்பாடி பழனிச்சாமி பிறந்த நாள் சிறப்பு பூஜை

வாணியம்பாடியில் எடப்பாடி பழனிச்சாமி பிறந்த நாள் சிறப்பு பூஜை

சிறப்பு பூஜை 

வாணியம்பாடியில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பிறந்த நாளை கொண்டாடும் வகையில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி சட்டமன்ற தொகுதி அதிமுக சார்பில் வளையாம்பட்டு கிராமத்தில் உள்ள முருகன் கோவிலில் கழகப் பொதுச் செயலாளர், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடியார் பிறந்தநாளை முன்னிட்டு வாணியம்பாடி தொகுதி எம்எல்ஏ கோ. செந்தில்குமார் தலைமையில் சிறப்பு பூஜையும், அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட கழக, நகரக் கழக , பேரூர் கழக, ஒன்றியக் கழக நிர்வாகிகள் பிற அணி நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story