வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எடப்பாடி பழனிச்சாமி நிவாரணம்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மக்களுக்கு எடப்பாடி பழனிச்சாமி நிவாரணம் வழங்கினார்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மக்களுக்கு முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி நிவாரண உதவிகளை வழங்கினார்.

தென் தமிழகத்தை உலுக்கிய கனமழையில் தூத்துக்குடி மாவட்டம் கடும் பாதிப்பை சந்தித்தது. நான்கு புறமும் மழை வெள்ளம் சூழ சாலைகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டன. தங்கள் உடைமைகளை இழந்து பல்வேறு இடங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். பொது மக்களை காண தூத்துக்குடிக்கு வருகை தந்தார் அதிமுக பொதுச் செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி இன்று காலை தூத்துக்குடி வந்தார். பின்னர் அண்ணா நகர் 12 சந்திப்பில் சுற்று வட்டார பகுதிகளின் வெள்ள பாதிப்பை பார்வையிட்டார். அங்குள்ள பொது மக்களை சந்தித்தார்.

பின்னர், மக்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்து 1,000க்கும் மேற்பட்டோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். உடன் அதிமுக மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன் கடம்பூர் ராஜூ எம்எல்ஏ, செல்லூர் ராஜூ எம்எல்ஏ, ஆர்.பி உதயகுமார் எம்எல்ஏ, ராஜேந்திர பாலாஜி, விஜயபாஸ்கர் எம்எல்ஏ, ராஜலட்சுமி, அதிமுக அமைப்பு செயலாளர் சின்னத்துரை, தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில செயலாளர் ராஜ் சத்யன், உள்ளிட்டோர் உடன் இருந்தனர்

Tags

Next Story