திமுக ஆட்சி மக்களை ஏமாற்றும் தந்திர மாடல் ஆட்சி - எடப்பாடி பழனிச்சாமி

திமுக ஆட்சி மக்களை ஏமாற்றும் தந்திர மாடல் ஆட்சி - எடப்பாடி பழனிச்சாமி

எடப்பாடி பழனிசாமி பேட்டி

திமுக ஆட்சி மக்களை ஏமாற்றும் தந்திர மாடல் ஆட்சி என எடப்பாடி பழனிச்சாமி கூறினார்.

சேலம் மாவட்டம் எடப்பாடி ஆய்வு மாளிகையில் சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, 'தேர்தல் அறிக்கையில் நகரப் பேருந்துகள் அனைத்திலும் இலவச பயணம் என வாக்குறுதி அளித்து விட்டு, இன்றைக்கு ஒரு சில பேருந்துகளில் மட்டுமே இலவச பயணம் அளிக்கப்படும் தந்திர மாடலாக திமுக ஆட்சி உள்ளது. இதில் பயணம் செய்யும் பெண்களிடம் சாதியின் பெயரைக் கேட்பது, தொலைபேசி எண்ணைக் கேட்பது பல்வேறு பிரச்சினைகளை ஏற்படுத்தும். இனிமேலாவது எதிர்க்கட்சிகள் சொல்லும் கருத்துக்களை ஆராய்ந்து உரிய தீர்வு காண வேண்டும்' என பேசினார்.

Tags

Next Story