எடப்பாடி ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவில் பூ மிதி திருவிழா !

எடப்பாடி ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவில் பூ மிதி திருவிழா !

பூ மிதி திருவிழா

எடப்பாடி அருகே ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவில் தீ மிதி திருவிழா வெகு விமர்சியாக நடைபெற்றது
எடப்பாடி அருகே ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவில் தீ மிதி திருவிழா வெகு விமர்சியாக நடைபெற்றது. சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே வீரப்பம்பாளையத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவில் திருவிழா ஆண்டுதோறும் மாசி மாதம் நடைபெறுவது வழக்கம். அதைத்தொடர்ந்து கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்டு இன்று பக்தர்கள் பூ கரகம் எடுத்து வந்து தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர் இதில் சுமார் ஆயிரத்திற்கு மேற்பட்ட பொதுமக்கள் தீ மிதித்தனர். மேலும் ஸ்ரீ சக்தி மாரியம்மன் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மேலும் பொதுமக்கள் பொங்கல் வைத்து ஸ்ரீ சக்தி மாரியம்மன் சுவாமிக்கு கிடா வெட்டி நேர்த்திக் கடன் செய்தனர்.

Tags

Next Story