வாரிசுகளுக்கு ரூ.3 லட்சம் கல்வி உதவித்தொகை!

வாரிசுகளுக்கு ரூ.3 லட்சம் கல்வி உதவித்தொகை!

ராணிப்பேட்டை எஸ்பி

காவல்துறை பணியாளர்களின் வாரிசுகளுக்கு ரூ.3 லட்சம் கல்வி உதவித்தொகையை எஸ்பி வழங்கினார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள காவல்துறை மற்றும் அமைச்சுப் பணியாளர்களின் வாரிசுகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட எஸ்பி கிரண் ஸ்ருதி தலைமை தாங்கி, ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த காவல்துறை மற்றும் அமைச்சு பணியாளர்களின் வாரிசுகள் 6 பேர் உள்பட 21 பேருக்கு 2022-23-ம் ஆண்டிற்கான கல்வி உதவித்தொகை ரூ.3 லட்சம் வழங்கினார். நிகழ்ச்சியில் நிர்வாக அலுவலர் (கணக்கு) பாரதி மற்றும் அலுவலக கண்காணிப்பாளர் சங்கர் (பணப்பிரிவு) உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story