பெட்ரோல் குண்டு வீச்சு : சிறுவன் உள்பட 8 பேர் கைது

பெட்ரோல் குண்டு வீச்சு : சிறுவன் உள்பட 8 பேர் கைது

கைது

கோவில்பட்டியில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் சிறுவன் உள்பட 8 பேரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி ராஜீவ் நகர் மூன்றாவது தெருவை சேர்ந்தவர் மாரிசெல்வம். இவர் ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுத்ததாக கூறி கார்த்திக் ராஜா மற்றும் அவரது ஆதரவாளர்கள் கடந்த 23ஆம் தேதி நள்ளிரவில் மாரிச்செல்வம் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.

இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பினை ஏற்படுத்தியது. சம்பவம் குறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தூத்துக்குடி மாவட்ட எஸ்பி பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில் கோவில்பட்டி டிஎஸ்பி வெங்கடேஷ், விளாத்திகுளம் டிஎஸ்பி ராமகிருஷ்ணன் ஆகியோர் மேற்பார்வையில் உதவி ஆய்வாளர்கள் மாதவா ராஜா, செந்தில்குமார் ஆகியோர் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடி வந்தனர்.

இந்நிலையில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் ஒரு சிறுவன் உட்பட 8 பேரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் 7 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags

Next Story