பணியின் போது மயங்கி விழுந்த போலீஸ் ஏட்டு சாவு

பணியின் போது மயங்கி விழுந்த போலீஸ் ஏட்டு சாவு

போலீஸ் ஏட்டு சாவு

பணியின் போது மயங்கி விழுந்த போலீஸ் ஏட்டு சாவு. போலீஸ் நிலையத்தில் பரிதாபம்.
சேலம் கன்னங்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் ஹரிதாஸ் (வயது 59). இவர் சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் இரவு வழக்கமாக பணியில் இருந்த அவர் திடீரென மயங்கி போலீஸ் நிலையத்திலேயே விழுந்தார். அங்கிருந்த போலீசார் அவரை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

Tags

Next Story