ஆனந்த சீனிவாச பெருமாள் கோவிலில் ஏகாதசி உற்சவம்

ஆனந்த சீனிவாச பெருமாள் கோவிலில் ஏகாதசி உற்சவம்

ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஆரா ஆனந்த ஸ்ரீனிவாச பெருமாள்

ஆரா ஆனந்த சீனிவாச பெருமாள் கோவிலில் நடந்த ஏகாதசி உற்சவத்தில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கள்ளக்குறிச்சியில் கச்சிராயபாளையம் சாலை, அம்மன் நகர், ஆரா ஆனந்த சீனிவாச பெருமாள் கோவிலில் நடந்த உற்சவத்தையொட்டி, பெருமாள், தாயார், மூர்த்திகளுக்கு சிறப்பு அலங்கார திருமஞ்சனம் நடந்தது. தொடர்ந்து, பெருமாளுக்கும் தாயாருக்கும் சிறப்பு அலங்காரம் செய்து, கோவில் உள்பிரகாரம் வலம் வந்தபின், சேவை சாற்றுமுறை, ஆராதனை நடந்தது. பின், சகஸ்ரநாம அர்ச்சனை செய்து வழிபாடு நடந்தது. மாலை 7:00 மணியளவில் சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஆரா ஆனந்த ஸ்ரீனிவாச பெருமாள் கள்ளக்குறிச்சி தேரோடும் வீதிகளில் வீதியுலா நடந்தது.

Tags

Next Story