ஸ்ரீரங்கம் : ஏகாதசி விழா நாளை நிறைவு விழா

ஸ்ரீரங்கம் :  ஏகாதசி விழா நாளை நிறைவு விழா

ஏகாதசி விழா

ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயிலில் நடைபெற்று வந்த வைகுந்த ஏகாதசி விழா செவ்வாய்க்கிழமை (ஜன.2) நம்மாழ்வாா் மோட்சத்துடன் நிறைவுபெற உள்ளது

வைணவ திருத்தலங்களில் முதல் திருத்தலமானது ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயிலில் வைகுந்த ஏகாதசி விழா டிச. 12- ஆம் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கிநடைபெற்றது. விழாவில் முக்கிய நிகழ்வான மோகினி அலங்காரம் டிச.22ஆம் தேதி நடைபெற்றது. இதையடுத்து திருவாய் மொழித்திருநாள் எனும் இராப்பத்து முதல் நாளான்று (டிச.23) வைகுந்த ஏகாதசியின் முக்கிய நிகழ்ச்சியான பரமபதவாசல் திறப்பு நடைபெற்றது. இதில், லட்சக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு நம்பெருமாளை தரிசித்தனா்.இதையடுத்து தினமும் நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு பரமபதவாசல் வழியாக வந்து இராப்பத்து மண்டபமான திருமாமணி மண்டபத்தில் பல்வேறு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தார்.

இராப்பத்தின் கடைசி நாளான திங்கள்கிழமை (ஜன.1) தீா்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழாவின் நிறைவு நாளான நாளை செவ்வாய்க்கிழமை (ஜன.2) காலை 6 மணிக்கு நம்மாழ்வாா் மோட்சம் நடைபெறவுள்ளது.அதனை தொடா்ந்து மூலஸ்தானத்தில் இயற்பா பிரபந்தம் இரவு 8.30 மணிக்கு தொடங்கி புதன்கிழமை (ஜன.3) காலை 6 மணிக்கு தீா்த்த விநியோக கோஷ்டியுடன் நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையா் செ.மாரியப்பன் மற்றும் கோயில் பணியாளா்கள் செய்துள்ளனா்.

Tags

Next Story