தீக்காயமடைந்த முதியவர் சிகிச்சை பலனின்றி சாவு !

தீக்காயமடைந்த முதியவர் சிகிச்சை பலனின்றி சாவு !

பெண் பலி

தீக்காயமடைந்த முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ரிஷிவந்தியம் அடுத்த காட்டுசெல்லுார் கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னசாமி,70; இவர், கடந்த ஜூன் 29ம் தேதி விளை நிலத்தில் இருந்த கரும்பு சோகைக்கு தீ வைத்துள்ளார். தீ மளமளவென பக்கத்து நிலத்திற்கும் பரவியது. தீயை அணைக்க முயன்ற சின்னசாமி மீது தீ பரவியது. இதில் படுகாயமடைந்த அவர், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் நேற்று முன்தினம் இறந்தார். ரிஷிவந்தியம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Tags

Next Story