விபத்தில் முதியவர் பலி

விபத்தில் முதியவர் பலி

முதியவர் பலி

கன்னிசேரி சிவகாசி சாலையில் டாட்டா ஏசி வாகனத்தில் சென்ற 53 வயது நபர் காயமடைந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருநெல்வேலி மாவட்டம், பொட்டல்புதூர் பகுதியைச் சார்ந்தவர் சக்திவேல் வயது 53 இவர் ஆடுகளை வாங்கி சில்லறை விற்பனை செய்து வியாபாரம் செய்து வருகிறார் இந்நிலையில் கடந்த மே மாதம் 30 ஆம் தேதி அதிகாலை 4 மணி அளவில் திண்டுக்கல்லில் நடக்கும் ஆட்டுச் சந்தைக்கு சக்திவேல் தனது நண்பர்களான அருணாச்சலம் மற்றும் ஆலங்குளம் தாலுகாவை சார்ந்த அரி கிருஷ்ணன் என்பவரை டிரைவராக வைத்துக்கொண்டு டாட்டா ஏசி வாகனத்தில் திண்டுக்கல் புறப்பட்டுச் சென்றதாக கூறப்படுகிறது.

அப்பொழுது அவரது சென்ற டாட்டா ஏசி வாகனத்தின் பின்னால் சக்திவேல் அமர்ந்திருந்ததாகவும் வாகனத்தை ஓட்டிச் சென்ற நபர் சிவகாசி சாலையில் வாகனத்தை நிறுத்தி பார்த்த பொழுது பின்னால் அமர்ந்திருந்த சக்திவேல் மயக்க அடைந்த நிலையில் தலையில் காயத்துடன் இருந்ததாகவும் சிவகாசியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி கொண்டு செல்லப்பட்ட நிலையில் திருநெல்வேலி சிகிச்சை பெற்று வந்த சக்திவேல் மே 31ஆம் தேதி உயிர் இழந்தார். இந்த சம்பவம் குறித்து வச்ச காரப்பட்டி காவல் நிலையத்தில் சக்திவேலின் மகன் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story