லாரி மோதி முதியவர் பலி: டிரைவர் கைது

லாரி மோதி முதியவர் பலி: டிரைவர் கைது

விபத்தில் முதியவர் பலி

தூத்துக்குடி மாவட்டம், தலைப்பண்ணையூரில் லாரி மோதி முதியவர் பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம், ஆத்தூர் அருகில் உள்ள தலைப்பண்ணையை சேர்ந்தவர் செந்தூர் பாண்டி(80). இவர் ஆத்தூர் சேர்ந்தபூமங்கலத்தில் உள்ள தனது மகள் கொடிச்செல்வி வீட்டில் வசித்து வந்தார். நேற்று பகலில் இவர் ஆத்தூரில் வசித்து வரும் தனது மற்றொரு மகளான மாரியம்மாள் வீட்டுக்கு சைக்கிளில் சென்றுள்ளார். பின்னர் அங்கிருந்து சைக்கிளில் இருந்து தலைப்பண்ணையூருக்கு சென்று கொண்டிருந்தார்.

வடக்கு ஆத்தூரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரி அருகே சென்றபோது, அந்த வழியாக செங்கல் லோடு ஏற்றிக் கொண்டு வந்த லாரி ஒன்று அவர் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த ஆத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வகுமார் சம்பவ இடத்திற்கு சென்று செந்தூர்பாண்டியன் உடலை கைப்பற்றி தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து லாரி டிரைவரான ஆறுமுகநேரி கணேசபுரத்தில் வசித்து வரும் இசக்கி (33) என்பவரை கைது செய்து விசாரித்து வருகிறார்.

Tags

Next Story