போக்சோ சட்டத்தில் முதியவர் கைது

போக்சோ சட்டத்தில் முதியவர் கைது

காவல் நிலையம் 

தேவூர் அருகே அம்மாபாளையம் பகுதியில் சிறுமியிடம் தகாத முறையில் நடந்து கொண்ட முதியவரை சங்ககிரி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
சங்ககிரியை அடுத்த தேவூர் அருகேயுள்ள அம்மாபாளையம் பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து மகன் மாரியப்பன் என்கின்ற வீரக்கள்ளன் (75). அதே பகுதியைச் சேர்ந்த சிறுமி அப்பகுதியில் உள்ள பொது குடிநீர் குழாயில் துவைத்த துணிகளை சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வந்துள்ளார். அப்போது அங்கு சென்ற முதியவர் வீட்டில் பூனை உள்ளது வந்து பிடித்துகொடு என்று சிறுமியிடம் கூறியுள்ளார். அதனையடுத்து வீட்டிற்கு சென்ற சிறுமியிடம் முதியவர் தகாத முறையில் நடந்து கொண்டுள்ளார். இது குறித்து சிறுமியின் தாயார் சங்ககிரி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார் . அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து போக்சோ சட்டத்தில் மாரியப்பன் என்கின்ற வீரக்கள்ளனை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Tags

Next Story