சேலத்தில் ரெயிலில் தலை வைத்து முதியவர் தற்கொலை

சேலத்தில் ரெயிலில்  தலை வைத்து முதியவர் தற்கொலை

தற்கொலை 

சேலத்தில் முதியவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சேலம் முள்ளுவாடி கேட் பகுதியில் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் தண்டவாளம் பகுதிக்கு வந்தார். பின்னர் அவர் திடீரென தண்டவாளத்தில் தலையை வைத்து படுத்து கொண்டார்.

அப்போது அந்த வழியாக வந்த விருத்தாசலம்- சேலம் பயணிகள் ரெயில் அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட முதியவர் உடல் துண்டாகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் அவர்கள் உடனடியாக சேலம் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தற்கொலை செய்து கொண்ட முதியவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அந்த முதியவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர்? என்ற விவரம் உடனடியாக தெரியவில்லை. இருப்பினும் அவர் எதற்காக தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை செய்து கொண்டார்? என்பது குறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம் முள்ளுவாடி கேட் பகுதியில் முதியவர் ஒருவர் ரெயில் வரும்போது தண்டவாளத்தில் தலையை வைத்து தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags

Read MoreRead Less
Next Story