தீர்த்தாரள்ளியில் யானை மிதித்து முதியவர் உயிரிழப்பு

பாலக்கோடு அருகே தீர்த்தாரள்ளியில் யானை குளிப்பதை வேடிக்கை பார்க்க சென்று முதியவர் யானை மிதித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டத்துக்கு உட்பட்ட தீர்த்தாரஅள்ளி கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளி கிருஷ்ணன் (70) இவர் யானையை வேடிக்கை பார்ப்பதற்காக தனது தோட்டத்தின் வழியே சென்றுள்ளார் அப்போது ,ஏரி பகுதியில் செல்லும்போது பர்கூர் காப்புகாடு மலைப்பகுதியில் பகுதியில் இருந்து வெளியேறி வந்த ஒற்றை காட்டு யானை மணியக்காரன் கொட்டாய் கிராமத்தில் உள்ள ஏரியில் ஆனந்த குளியலிட்டு இறைத் தேடி ஊரைச் சுற்றி வந்துள்ளது, அது சமயம் இன்று அதிகாலை சற்றும் எதிர்பாராமல், அவ்வழியே வேடிக்கை பார்க்க சென்ற போது யானை தாக்கியதில் பலத்த காயம் அடைந்த முதியவர் சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளார்.

இதையடுத்து கிராம மக்கள் பாலக்கோடு காவல்துறைக்கும் வனத்துறைக்கும் தகவல் தெரிவித்ததை அடுத்து விரைந்து வந்த அதிகாரிகள் பிரேதத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர், மேலும் உடல் கூறு ஆய்வுக்காக தர்மபுரி அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த விபத்து குறித்து பாலக்கோடு காவல்துறை மற்றும் வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story