வீட்டில் மாடிப்படி ஏறும்போது தவறி விழுந்த முதியவர் பலி

வீட்டில் மாடிப்படி ஏறும்போது தவறி விழுந்த முதியவர் பலி

முதியவர் பலி 

காவேரிப்பாக்கம் அருகே வீட்டில் மாடிப்படி ஏறும் போது தவறி விழுந்த முதியவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை எடுத்து வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கத்தை அடுத்த வேகாமங்களம் கிராமத்தைச் சேர்ந்தவர் இருசப்பன் (67). இவர் கடந்த 13-ந் தேதியன்று வீட்டில் மாடிப்படி ஏறும்போது எதிர்பாராத விதமாக கால் தவறி கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயமடைந்த அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கும்பாறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார். இதுதொடர்பாக அவரது மகன் எழிலரசன் காவேரிப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story