மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் முதியவர் பலி

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் முதியவர் பலி

சாலை விபத்து 

. கள்ளக்குறிச்சி மாவட்டம் வானாபுரம் தாலுகா மணலூர்பேட்டையை சேர்ந்தவர் சுப்பராவ் 82. இவர் காஞ்சிபுரத்தில் வசிக்கும் தனது மகளை பார்ப்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றார். பின்னர் மீண்டும் மணலூர்பேட்டை செல்வதற்காக சம்பவதினத்தன்று மோட்டார் சைக்கிளில்அவலூர்பேட்டை வழியாக திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் நோக்கி வந்து கொண்டிருந்தார்.

அப்போது புறவழிச்சாலை சந்திப்பில் வந்த போது சென்னையிலிருந்து அதி வேகமாக வந்து கொண்டிருந்த கார் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சுப்பராவ் கால் தொடை முழுவதுமாக நசிங்கியதில் பலத்த ரத்த காயம் ஏற்பட்டது. மேலும் உடலில் பல இடங்களில் சிராய்ப்பு காயமும் ஏற்பட்டது. உடனடியாக அக்கம் பக்கத்தினர் ஓடிச் சென்று அவரை மீட்டு108 ஆம்புலன்ஸில் ஏற்றி திருவண்ணாமலை மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சுப்பராவ் இறந்தார். இது குறித்து இறந்த சுப்பராவ் மகன் கண்ணதாசன் கீழ்பென்னாத்தூர்போலீசில் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story