சேஷம்பட்டியில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி மூதாட்டி உயிரிழப்பு

சேஷம்பட்டியில்  அடையாளம் தெரியாத வாகனம் மோதி மூதாட்டி உயிரிழப்பு

காவல் நிலையம் 

சேஷம்பட்டி தேசிய நெடுஞ்சாலை பகுதியில் 70 வயது மூதாட்டியை அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம், மூதாட்டி மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் தூக்கி வீசப்பட்ட மூதாட்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம் பங்குநத்தம் கவுண்டன்கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் மல்லன். இவரது மனைவி பழனியம்மாள் 70 வயது மூதாட்டி ஆன இவர் காலை நல்லம்பள்ளி அருகே சேஷம்பட்டி தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம், மூதாட்டி மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.

இதில் தூக்கி வீசப்பட்ட மூதாட்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த அதியமான்கோட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story