திருவாமூரில் மின்சாரம் தாக்கி மூதாட்டி உயிரிழப்பு

திருவாமூரில் மின்சாரம் தாக்கி மூதாட்டி உயிரிழப்பு

காவல் நிலையம் 

திருவாமூரில் மின்சாரம் தாக்கி மூதாட்டி உயிரிழந்தார்.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த திருவாமூர் பள்ளத்தெருவை சேர்ந்த அரசப்பன் இவரது மனைவி கிருஷ்ணவேணி இவர் நேற்று வீட்டை பெருக்கிட துடைப்பத்தை எடுத்தார். அப்போது அங்கிருந்த எர்த் ஒயரில் இருந்து துடைப்பத்தில் மின்சாரம் தாக்கியதில் சம்பவ இடத்தில் கிருஷ்ணவேணி உயிரிழந்தார்.

இது குறித்து புதுப்பேட்டை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story