மூச்சுத் திணறலால் மருத்துவமனை செல்லும் வழியில் மூதாட்டி, உயிர் இழப்பு.

மூச்சுத் திணறலால் அவதிப்பட்ட மூதாட்டி, மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிர் இழப்பு. மாயனூர் காவல்துறை வழக்கு பதிவு.
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தாலுகா, உள்வீரராக்கியம் பகுதியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் மனைவி சரஸ்வதி வயது 69. கூலி தொழிலாளியான இவருக்கு ஜனவரி 28ஆம் தேதி இரவு 9:30 மணி அளவில் திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது. உடனடியாக அவரை கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே அவர் மூச்சு திணறி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து சரஸ்வதியின் பேரன் மோகன்ராம் வயது 26 என்பவர், மாயனூர் காவல்துறையினருக்கு அளித்த புகாரின் பேரில்,சம்பவ இடத்துக்கு சென்று, உயிரிழந்த சரஸ்வதியின் உடலை, உடற்கூறு ஆய்வுக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சவக்கிடங்கிற்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் மாயனூர் காவல்துறையினர்.

Tags

Next Story