விக்கிரமங்கலத்தில் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சார பேரணி

விக்கிரமங்கலத்தில் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சார பேரணி

பிரச்சார பேரணி

மதுரை மாவட்டம் விக்கிரமங்கலத்தில் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சார பேரணி.
மதுரை மாவட்டம் விக்கிரமங்கலத்தில் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சார பேரணி நடைபெற்றது. தேனி பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட செல்லம்பட்டி ஒன்றியம் விக்கிரமங்கலம் பகுதியில் 100% வாக்களிக்கும் படியும், ஒட்டுக்கு பணம் வாங்க மாட்டோம் என உறுதிமொழி ஏற்று தேர்தல் விழிப்புணர்வு பேரணி மற்றும் பிரசாரம் நடைபெற்றது. உசிலம்பட்டி தாசில்தார், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சுரேஷ் பிரட்ரிக்கிளமண்ட் ஆகியோர் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். விக்கிரமங்கலம் உதவி ஆய்வாளர் அசோக் குமார், வருவாய் ஆய்வாளரசாந்தலட்சுமி, விக்கிரமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் கலியுக நாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிராம நிர்வாக அலுவலர்கள் முத்துமணி, ஜோதிராஜ், D முருகன், ராஜா சக்கரவர்த்தி, பவித்ரா, மற்றும் ஊராட்சி செயலாளர்கள், கிராம உதவியாளர்கள், சமூக ஆர்வலர்கள், ஓட்டுச்சாவடி அலுவலர் மற்றும் பணியாளர்கள் உப்பட பலர் கலந்து கொண்டனர். விழிப்புணர்வு பேரணி விக்கிரமங்கலம் பேருந்து நிலையத்தில் தொடங்கி அதே இடத்தில் மீண்டும் வந்து நிறைவு பெற்றது.

Tags

Read MoreRead Less
Next Story