ஈரோட்டில் தேர்தல் விழிப்புணர்வு: செல்பி பாயிண்ட் அமைப்பு

ஈரோட்டில் தேர்தல் விழிப்புணர்வு: செல்பி பாயிண்ட் அமைப்பு

மாணவர்களுடன் சேர்ந்து செல்ஃபி எடுத்த ஆட்சியர்

ஈரோட்டில் பொதுமக்களிடையே வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் செல்பி பாயிண்ட் அமைக்கப்பட்டுள்ளது.

வருகிற பாராளுமன்ற தேர்தல் 2024-ஐ முன்னிட்டு, ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜ கோபால் சுன்கரா பொதுமக்களிடையே வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட ஆட்சியரக அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்ட தேர்தல் பருவம் - தேசத்தின் பெருமிதம் மற்றும் என் ஓட்டு , என் உரிமை என்ற selfie photo Point-ல் கல்லூரி மாணவ, மாணவியர்களுடன் புகைப்படங்கள் எடுத்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

மேலும் பொதுமக்களிடையே வாக்களிப்பதின் அவசியத்தை வலியுறுத்தும் விதமாக கையெழுத்து இயக்கத்தை ஆரம்பித்து தானும் கையெழுத்திட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தினர் மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா.இந்த நிகழ்ச்சியில் ஏராளமான கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு செல்ல எடுத்தும் கையெழுத்தும் இட்டனர்.

Tags

Next Story