தேர்தல் விழிப்புணர்வு கோலம் போட்டி!

பொன்னமராவதி ஒன்றியத்தில் வருவாய் துறை சார்பில் தேர்தலில் வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வு கோலப்போட்டி நடைபெற்றது.

பொன்னமராவதியில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வருவாய் துறை சார்பில் தேர்தல் குறித்து வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கோலப் போட்டி நடந்தது. தலைமையிடத்து துணை தாசில்தார் சேகர் தலைமை வகித்தார். ஒன்றிய ஆணையர் வீரையா முன்னிலை வகித்தார். இதில் மகளிர் சுய உதவிக் குழுவினர் கலந்துகொண்டு கோலங்களை வரைந்தனர்.

ஆலங்குடி தாலுகாவுக்கு உட்பட்ட மாங்காடு, கே வி கோட்டை, ஆலங்காடு, கரிபிரான் கோட்டை, மேலத்தூர், கல்லாக்குடி, பள்ளத்து விடுதி ஆகிய ஊராட்சி சேர்ந்த மகளிர் திட்ட சுய உதவி குழு பெண்கள் கலந்துகொண்டு நமது ஓட்டு நமது உரிமை, நூறு சதவீதம் ஓட்டளிப்போம், ஓட்டு விற்பனைக்கு அல்ல என்ற வாசகங்களுடன் விழிப்புணர்வு கோலங்களை வரைந்தனர்.

விராலிமலை தாலுகா அலுவலகம் முன்பு நடந்த கோலப் போட்டியில் மகளிர் சுய உதவி குழுக்களை சேர்ந்த பெண்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு கோலம் வரைந்தனர். போட்டியில் பங்கேற்றவர்களுக்கு தாசில்தார் கருப்பையா பரிசு வழங்கினார்.

Tags

Next Story