கலெக்டர் தலைமையில் தேர்தல் விழிப்புணர்வு !

கலெக்டர் தலைமையில் தேர்தல் விழிப்புணர்வு !

விழிப்புணர்வு

கள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில், தேர்தல் விழிப்புணர்வு விளம்பரங்கள் ஒட்டப்பட்ட பள்ளி வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைக்கப்பட்டது.

கள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில், தேர்தல் விழிப்புணர்வு விளம்பரங்கள் ஒட்டப்பட்ட பள்ளி வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைக்கப்பட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வரும் லோக்சபா தேர்தலில் வாக்காளர்கள் 100 சதவீதம் ஓட்டுப்போட வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி கள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில், 'என் ஓட்டு விற்பனைக்கு அல்ல' தேர்தல் வரலாறு மற்றும் விழிப்புணர்வு வரை படங்கள் ஒட்டப்பட்ட பள்ளி வாகனங்களை கலெக்டர் அலுவலகத்திலிருந்து மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரி ஷ்ரவன்குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

டி.ஆர்.ஓ., சத்தியநாராயணன், கள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து அலுவலர் ஜெயபாஸ்கரன், மோட்டார் வாகன ஆய்வாளர் செல்வம் உட்பட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story